Archive for ஓகஸ்ட் 2007
ஹாய் குட்டீஸ்!
உங்களுக்கு புதிய முயல் ஆமை கதை தெரியுமா?
ஒரு காட்டுல இருந்த முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப் பந்தயம் வச்சாங்களாம்.
முயலோட போட்டி போட முடியாது. உன் தகுதிக்கு மீறி ஆசைப் படாதேன்னு ஆமையோட பிரண்ட்ஸ் சொன்னாங்களாம்.
அதுக்கு ஆமை சொல்லிச்சாம் ‘போங்கடா பயந்தாங்கொல்லிகளா. இதுக்கு முன்னாலே எங்க தாத்தா இப்படித்தான் ஒரு முயலோட ஓட்டப் பந்தயத்துல கலந்துகிட்டாராம். தான் பலசாலி வேகமா ஓடுபவன் னு திமிரோட அந்த முயல் ஒரு மரத்து அடியில் படுத்துத் தூங்க எங்க தாத்தா ஆமை மெதுவா ஓடிப் போயி ஜெயிச்சிடுச்சாம்.
அப்போ அந்த ஜட்ஜ்’ஸ்லோ வின் த ரேஸ்னு’
தன்னைப் பத்தி கர்வமாயிருப்பவன் ஜெயிக்கிறதில்லை அப்படீன்னு சொன்னாராம்.
அதனால நானும் ஜெயிச்சுக் காட்டுவேன்னு’ சொல்லியதாம்.
போட்டி நாள் அன்னைக்கு ரெண்டும் ஓடத் தொடங்கியதாம்.
வேகமா ஓடிய முயல் பின்னால ஆமை வராததால சரி கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுப்போமென்று ஒரு மரத்து நிழல்ல படுத்து விட்டதாம்.
மெதுவா ஓடி வந்துகிட்டிருந்த ஆமை வெகு நேரம் கழித்து முயல் தூங்கும் மரத்தருகே வந்ததாம். மரத்தடியில முயல் தூங்குவதைப் பார்த்ததாம்.
ஆஹா இந்த முயல்கள் என்னைக்குமே கர்வம் புடிச்சவர்கள்.
திருந்தவே மாட்டார்களோ என்று நினைத்தபடி ஓட்டத்தைத் தொடர்ந்ததாம்.
திரும்பித் திரும்பி பார்த்தபடி ஓட முயல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணலையென்றதும் தன் தாத்தாவைப் போலவே தான் தான் ஜெயிக்கப் போறோம்னு ஆமைக்கு சந்தோஷமாம்.
வின்னிங் பாயிண்ட்டை நெருங்கும் போது பின்னால் வேகமாக முயல் வருவது தெரிந்ததாம்.
ஓடி வந்த முயல் வின்னிங் பாயிண்ட்டை முதலில் தொட்டு ஜெயித்ததாம்.
ஆமைக்கு ஒரே ஆச்சரியம் .அதோடு சந்தேகமும்.
நல்லா தூங்கிக் கொண்டிருந்த முயல் எப்படி திடீரென்று ஓடி வந்து ஜெயிச்சிடுச்சு.ஒருவேளை பயத்துல நாமதான் கனவு காண்கிறோமா இல்லை பிரமையா ன்னு தன்னையே கிள்ளிப் பார்த்ததாம்.
முயல் சிரித்துக் கொண்டே சொல்லியதாம்,’நண்பா எல்லா நேரத்திலும் எல்லோரும் ஒரே மாதிரி நடந்துக்க மாட்டாங்க.எங்க தாத்தா ஏதோ தப்புக் கணக்குப் போட்டு தூங்கியதால தோத்துப் போயிட்டார்.
ஆனா நான் இந்தக் காலத்துப் பிள்ளை.எப்படி டைம் மானேஜ் பண்ணுவதுன்னு தெரியும்.
உன் வேகத்தையும் ஓட வேண்டிய தூரத்தையும் கணக்கு பண்ணி அதுக்கு தகுந்த மாதிரி ரெஸ்ட் எடுத்தேன்.
எப்படி கரெக்ட்டான நேரத்துல விழிச்சேன்னு பாக்கறியா?இதோ பாரு என் கைக்கடிகாரத்தில் டைம் செட் பண்ணி அலாரம் வத்திருந்தேன்.அலாரம் அடித்ததும் எழுந்து ஓடி வந்து உன்னை முந்திவிட்டேன்’ என்று சிரித்ததாம்.
ஆமை உடனே,’சாரி நண்பா நான் உன்னைத் தவறாக எடை போட்டுவிட்டேன்.உன் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் ‘என்று வாழ்த்தியதாம்.
என்ன குட்டீஸ் கதை பிடிச்சிருக்கா? நீதி என்னன்னு கேக்கறீங்களா?
நீதி: யாரையும் தப்புக் கணக்கு [under estimate]பண்ணக்கூடாது
சரியானபடி திட்டமிட்டு [planning]ஒரு வேலையைச் செய்தால் நிச்சயம் வெற்றிதான்.
ஓகே சீ யூ பை
கண்மணி ஆண்ட்டி
எல்லா அண்ணாவுக்கும்….
Posted ஓகஸ்ட் 31, 2007
on:- In: வாழ்த்து
- 11 Comments
குட்டீஸ் விளையாட்டுக்கள்
Posted ஓகஸ்ட் 26, 2007
on:- In: விளையாட்டு
- 7 Comments
சர்தார் ஜோக்ஸ்
Posted ஓகஸ்ட் 21, 2007
on:- In: ஜோக்ஸ்
- 7 Comments
Sardar’s theory : Moon is more impt than Sun, coz it gives light atnight when light is needed & Sun gives light during the day when lightis not needed!!!
Sardar shouting 2 his girl friend ” u said v will do register marriageand cheated me,
குட்டீஸ் ”HAPPY FRIENDSHIP DAY”
Posted ஓகஸ்ட் 4, 2007
on:- In: வாழ்த்து
- 13 Comments
யார் ஏழை?
Posted ஓகஸ்ட் 4, 2007
on:- In: கதை
- 6 Comments
திரும்ப வரும் போது, அப்பா கேட்டார், ஏழை எப்படி இருக்காங்கன்னு பார்த்தியா?… இப்ப என்ன சொல்றே?
மகன் சொன்னான் ”ஆமா..அப்பா..என் கிட்ட ஒரு நாய் குட்டி தான் இருக்கு ஆனா அவங்க கிட்ட நாலு இருக்கு…நம்ம வீட்ல ஸ்விம்மிங் பூல் கார்டன்ல நடுவுல இருக்கு..ஆனா அவங்க வீட்டு பக்கத்துல அழகான ஆறு ஓடுது… நாம கலர் கலரா லைட் போட்டு, படங்கள் மாட்டி நம்ம வீட்டு அழகு படுத்தறோம்..ஆனா அவங்க வீட்டுல் ரெயின்போ அழகு படுத்துது…நம்ம சுவரோட நம்ம வீட்டு எல்லை முடிஞ்சுடுது…ஆனா அவங்களுக்கு கண்ணுக்கு எட்டுன் தூரம் வரை அவங்க எல்லை.. நாம காசு குடுத்து அரிசி வாங்குறோம்..ஆனா இவங்க நம்ம கிட்ட அதை விக்கறாங்க.. நம்மள பாதுக்காக்குறதுக்கு நம்மள சுத்தி சுவர் மட்டும் தான் இருக்கு…ஆனா இவங்க பாதுகாப்புக்கு நண்பர்கள் இருக்காங்க..
அவங்க அப்பா வாயடைச்சே போயிட்டார். அவருக்கும் இப்ப நிறைய விஷயங்கள் புரிஞ்சது.